ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 2.ஓ படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
எந்திரன் படத்தின் பட்ஜெட் தோராயமாக ரூ.180 கோடி என்று கூறப்பட்டது. தற்போது, ‘2.ஓ’ படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கவிருக்கிறார்களாம். இதன்மூலம், தென்னிந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் வெளிவந்தது. தற்போது, அதையெல்லாம் ‘2.ஓ’ தகர்த்தெறிந்துவிட்டது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் முழுவதும் சென்னையில் நடைபெறுகிறது.
படப்பிடிப்பு ஈவிபி ஸ்டுடியோவில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. படம் குறித்து எந்தவொரு தகவலும் கசிந்துவிடக்கூடாது என்பதில் படக்குழுவினர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment