தமிழா நாமும் இணைந்தோமே...! ஏ.ஆர். ரஹ்மானின் உணர்வுபூர்வமான இசை நிகழ்ச்சி டீஸர்! (வீடியோ)
சென்னை (ஜனவரி 16), கோவை (ஜனவரி 23), மதுரை (ஜனவரி 31) ஆகிய நகரங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி சென்னை, கடலூர் வெள்ள நிவாரணத்துக்குச் செல்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உணர்வுபூர்வமான டீசரை வெளியிட்டுள்ளார் ரஹ்மான். மரியான் படத்தில் இடம்பெற்ற நெஞ்சே எழு பாடலின் ஆரம்ப வரிகளைச் சற்று மாற்றியமைத்து டீசரை உருவாக்கியுள்ளார். இதற்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.
பாடல் வரிகள்
ஆயிரம் கனவுகள் கரைந்தாலும், இருளால் காலம் உறைந்தாலும், கண்ணீர் நதியாய் ஆனாலும், தூங்கும் நகரம் மிதந்தாலும்...
தமிழா நாமும் இணைந்தோமே! தமிழா நாமும் இணைந்தோமே!
மீண்டும் எழுவோமே...
நெஞ்சே எழு! நெஞ்சே எழு!
No comments:
Post a Comment