டி.ராஜேந்தர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 4 January 2016

டி.ராஜேந்தர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

T-rajendarசென்னை போரூர் செட்டியார் அகரம் பகுதியில் டி.ராஜேந்தருக்கு சொந்தமான படப்பிடிப்பு பங்களா உள்ளது. இங்கு டி.ராஜேந்தர் தனது படங்களுக்கான படப்பிடிப்புகளை நடத்துவார். மற்ற படப்பிடிப்புகளுக்கும் பங்களாவை வாடகைக்கு விடுவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ‘‘போரூரில் உள்ள டி.ராஜேந்தரின் பங்களாவில் குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது’’ என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் டி.ராஜேந்தர் பங்களாவுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு குண்டு வெடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. வெடிகுண்டும் சிக்கவில்லை. இதன் பிறகே அது புரளி என்பது தெரிய வந்தது.

மிரட்டல் விடுத்தது யார்? என்பது கண்டுபிடிப்பதற்காக மதுரவாயல் போலீசார் போன் நம்பரை வைத்து துப்பு துலக்கினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் செல்போனில் இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

அப்போது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. போலீசார் பேசியதும் அப்பெண் இணைப்பை துண்டித்து விட்டு செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார்.

அந்த பெண்தான் ஆண் குரலில் 108 கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசி மிரட்டியது தெரிய வந்தது. அவர் செல்போனை தொடர்ந்து சுவிட்ச்ஆப் செய்து வைத்துள்ளார். இதனால் மிரட்டல் விடுத்த பெண் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அவர் பிடிபட்டால்தான் மிரட்டல் விடுத்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.

சிம்புவின் பீப் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அப்பெண் டி.ராஜேந்தரின் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages