மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பள விவகாரத்தில், மன்னரே நேரடியாக தலையிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளப் பாக்கியை வழங்க முன்வந்தன. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் நிறுவனங்கள் தவித்தன. இதையடுத்து மன்னர் சல்மான், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க 100 மில்லியன் சவுதி ரியால்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு இந்தத் தொகை கடனாக வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்தத் தொகை நிறுவனங்களிடம் இருந்து திரும்ப வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சவுதியில் தவிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சவுதி ஏர்லைன்ஸ் மூலம் சொந்த நாடு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும், விமானக் கட்டணத்தை அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களிடம் வசூலிக்குமாறும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சவுதியில் தவிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சவுதி ஏர்லைன்ஸ் மூலம் சொந்த நாடு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும், விமானக் கட்டணத்தை அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களிடம் வசூலிக்குமாறும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment