நடிகர் சங்கத்தில் நடப்பது என்ன? - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 13 October 2015

நடிகர் சங்கத்தில் நடப்பது என்ன?

சுமார் 3,500 திரைப்பட மற்றும் நாடக நடிகர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்ப்ட நடிகர் சங்கத்துக்கு தேர்தல் வரவிருக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்து இதுவரை நடந்த எந்த ஒரு நடிகர் சங்க தேர்தலைச் சுற்றியும் இந்த அளவு பரபரப்பும், காரசார விவாதங்களும் அவதூறு சுமத்தல்களும் இருந்ததில்லை. இவ்வளவு ஊடக கவனமும் இருந்ததில்லை.

 இந்த முறை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் ஒரு புறம் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக விஷால் தலைமையிலான அணி களமிறங்கியிருக்கிறது. இவ்வணி களங்கமிறங்கி இருக்கவில்லை என்றால் தற்போதைய நிர்வாகிகளே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் போட்டியிடும் அணியைச் சேர்ந்த விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் பதவிக்கு வருவது தங்கள் நோக்கமில்லை என்றும் நிர்பந்தத்தால்தான் போட்டியிடுகிறோம் என்று ஒருமித்தக் குரலில் சொல்கிறார்கள். அப்படி என்ன நிர்பந்தம்?



18 கிரவுண்ட் நிலமும் பல்லாயிரம் பிரச்சனைகளும்

 நடிகர் சங்க வளாகத்துக்கு சொந்தமான 18 கிரவுண்ட் நிலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அதன் தலைவராக இருந்தபோது ரூ.40,000 கொடுத்து வாங்கப்பட்டது. இந்த நிலம் நடிகர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமானது. அதில் நடிகர்களுக்கு பயன்படுத்துவதற்கான கட்டடம் கட்டுவதற்காகப் பெறப்பட்ட சில லட்சங்கள் சங்கத்தின் பெயரில் ரூ.4 கோடி கடனாக வளர்ந்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்தும் செயலாலராக சரத்குமாரும் இருந்தபோது அவர்கள் இருவரும் முயற்சித்து வெளிநாடுகளில் முன்னணி நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சி நடத்தி அந்தக் கடனை அடைத்தார்கள்.

 இப்போது அந்த நிலத்தில் ஒரு கட்டடம் கட்டசங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமாரும் செயலாளராக இருக்கும் ராதாரவியும் போட்ட ஒப்பந்தம்தான் எதிர்ப்புவரக் காரணமாகியிருப்பதோடு நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடுமோ என்று அஞ்சுமளவுக்கு பிரச்சனையை பூதாகரமாக்கியிருக்கிறது.



சினிமா தியேட்டரா? கல்யாண மண்டபமா?

 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாத, சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரின் முயற்சியால் ஸ்பை (சத்யம்) சினிமாஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதன்படி அந்த நிலத்தை ஸ்பை நிறுவனத்துக்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டு அதில் அந்நிறுவனம் கட்டும் திரையரங்கம் உள்ளிட்ட வணிக வளாகத்திலிருந்து வரும் வருமானத்தில் மாதம் ரூபாய் 26 லட்சத்தை சங்கத்துக்கு தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் கட்டடத்தின் தரைத்தளத்தில் 3500 சதுர அடியில் நடிகர் சங்கத்துக்கான அலுவலகம் எழுப்பிக்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இதனால் அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்ட மார்ச் 2011ல் இடிக்கப்பட்டது.

 ஆனால் இந்த ஒப்பந்தம் பல்வேறு சட்டச் சிக்கல்களில் சிக்கி உள்ளது. சங்கம் செயல்படும் ஹபிபுல்லா சாலையில் 7 பள்ளிகளும் சில தனியார் மருத்துவமனைகளும் இருக்கின்றன. எனவே அந்த இடத்தில் ஒரு வணிக வளாகம் வந்தால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அது பல்வேறு சிக்கல்களையும் ஆபத்துகளையும் கொண்டுவரும் என்ற அச்சத்தில் அங்கு வணிக வளாகம் கட்டப்படுவதை எதிர்த்து அருகாமையில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகமும் ஒரு குடியிருப்போர் நல சங்கமும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கின்றன. அதோடு நடிகர் சங்கத்தின் செய்ற்குழு உறுப்பினராக இருந்த பூச்சிமுருகன் இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதில் சில தவறுகள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages