மகேஷ்பாபுவிடம் இருந்து '24' சூர்யாவுக்கு மாறியதன் பின்னணி - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 28 December 2015

மகேஷ்பாபுவிடம் இருந்து '24' சூர்யாவுக்கு மாறியதன் பின்னணி

                                     
24' படத்தின் கதையை விக்ரம் குமார் முதலில் மகேஷ் பாபுவிடம் தான் தெரிவித்திருக்கிறார். அவர் நிராகரிக்கவே அக்கதையில் சூர்யா நடித்திருக்கிறார்.
விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
மும்பை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதையை மகேஷ்பாபுவிடம்தான் முதலில் தெரிவித்திருக்கிறார் விக்ரம் குமார். படத்தின் முதல் பாதிக் கதை மிகவும் பிடித்திருந்தாலும், இரண்டாவது பாதிக் கதை திருப்திகரமாக அமையாததால் அக்கதையில் நடிக்கும் திட்டத்தை கைவிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு கதையைக் கூறியிருக்கிறார் விக்ரம் குமார். சூர்யாவுக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, அவரே நடித்து தயாரித்தும் இருக்கிறார்.
இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். கோடை விடுமுறையைக் கணக்கில் கொண்டு இப்படத்தை வெளியிட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages