சிம்பு எழுதி பாடிய ஆபாச பாடல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பெண்கள் தொடர்பான அவதூறான வார்த்தை இந்த பாடலில் இடம் பெற்றிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சிம்பு, அனிருத் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாடலுக்கு பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும், நடிகர்கள், நடிகைகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இவர் கூறும்போது, ‘‘நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பாடல் தமிழ் நாட்டிற்கு தலைக்குனிவு. பெண்களை கொச்சை படுத்தி பாடல் வரிகள் எழுதியிருப்பது மறக்க முடியாத மன்னிக்க முடியாத குற்றம்’’ என்றார்.
No comments:
Post a Comment