தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி. வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘‘நடிகை எமிஜாக்சன் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்திலும் இதனை வற்புறுத்தி உள்ளார். ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டு.
எங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர்-நடிகைகள் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ரஜினிகாந்தின் ‘எந்திரன்-2’ படத்தில் இருந்து எமிஜாக்சனை உடனடியாக நீக்க வேண்டும் இல்லையென்றால் வருகிற திங்கட்கிழமை (21-ந்தேதி) முற்றுகை போராட்டம் நடத்தப்படும். ‘எந்திரன்-2’ படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.
No comments:
Post a Comment