எதற்கு ஆவேசம்?:விளக்கவில்லை இளைய ராஜா - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 27 December 2015

எதற்கு ஆவேசம்?:விளக்கவில்லை இளைய ராஜா

சிம்பு-அனிருத் பாடல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ஆவேசமடைந்த இசையமைப்பாளர் இளையராஜா எதற்கு ஆவேசம் என்று விளக்கவில்லை.

சிம்பு-அனிருத் கூட்டணியில் வெளிவந்த பீப் பாடலுக்கு அனைத்துத் தரப்பிலும் எழுந்த கண்டனங்கள் ஒரு புறமிருக்க, இருவர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரையும் நேரில் ஆஜராக சம்மனும் வந்துள்ளது. இந்நிலையில், எந்த பாடலுக்கும் தணிக்கை வேண்டும் என்று மூத்த கவிஞரான வைரமுத்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு வெளியில் வந்த இசைஞானி இளைய ராஜாவிடம் செய்தியாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிம்பு-அனிருத் பீப் பாடல் குறித்த கேள்வியை எழுப்பினர்.அப்போது கேள்வி கேட்ட நிருபரைப் பார்த்து உனக்கு அறிவிருக்கிறதா என்று கேட்டார். சற்றே மரியாதையுடன் பேசாமல் மவுனம் காத்த அந்த நிருபரைக் கண்டு மீண்டும் மீண்டும் இளைய ராஜா அதே கேள்வியை எழுப்பினார்.

பதிலுக்கு அந்த நிருபர் அறிவிருப்பதால்தான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் என்றார். என்னிடம் பேச நீ எந்த அறிவில் கேள்வி கேட்கிறாய் என்று கேள்வி கேட்ட இசைஞானி நிருபரிடம் ஆவேசப்பட்டார். என்றாலும் இசை ஞானியின் முகத்தில் சிறிதும் கோபம் இல்லை. எனில் இந்த ஆவேசம் எதற்காக என்பதை இளைய ராஜா விளக்கி இருந்தாலும், அதோடு ராஜாவிடம் கேள்வி கேட்க எந்த மாதிரி அறிவு வேண்டும் என்று விளக்கி இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். ராஜா சார் என்று அனைத்து தரப்பு மக்களாலும் அன்புடனும், அவர் மீது மட்டற்ற மரியாதையுடனும் இருக்கும் தமிழக ஊடகங்களுக்கு தாம் ஆவேசப் பட்டதற்கான காரணத்தை விளக்கும் கடமை கண்டிப்பாக இளைய ராஜாவுக்கு உண்டு என ஊடக அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages