காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்ட சிம்பு- அனிருத் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 27 December 2015

காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்ட சிம்பு- அனிருத்

கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளனர் சிம்பு-அனிருத் இருவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பீப் பாடலை எழுதி பாடிய விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கும், அந்த பாடலுக்கு இசை அமைத்து அனிருத்துக்கும் கோவை காவல் நிலையம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது.இந்த படம் மிகவும் ஆபாசமாக உள்ளது என்று பல்வேறு பெண்கள் அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கோவை காவல் நிலையத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு சிம்பு, அனிருத்தை கைது செய்ய வேண்டும் என்று புகார் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து தங்களுக்கு அதிகப் பணிகள் இருப்பதால் உடனடியாக நேரில் ஆஜராக வேண்டும் என்கிற விதிமுறைகளைத் தளர்த்தி ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இருவர் சார்பாகவும் அவரவர் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.இதையடுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து காவல் துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages